ஆதாரம் நீர் தான் ஐயா
காலங்கள் மாற கவலைகள் தீர
காரணர் நீர்தானையா – இயேசையா
உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பம் தான் நிறைக்கின்றது
குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதி தான் கலைகின்றது
உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை
உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்