ஆட்கொண்ட தெய்வம்
திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
புயல் வீசுன் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே – தினம்
எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே – தினம்
நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே – என்னை விட்டு
இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே
காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே