அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தம்
ஒரு நாள் உம் தயை கண்டேனையா
அந்நாளில் என்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா – என்மேல்
உம் தயை பெரிதையா… ஆ…. ஆ…
பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரிலன் பேனையா
ஆழம் அறிவேனோ – அன்பின்
ஆழம் அறிவேனோ….. ஆ…. ஆ…
அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே எனையும்
அணைத்தீர் அன்பாலே…. ஆ….. ஆ…
பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின்பூவைப் போல்
வாடாதே ஐயா
அன்பு வாடாதே ஐயா
இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற்கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ – பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ.. ஆ…… ஆ.
DOWNLOAD PPT
……….