பவனி செல்கின்றார் ராசா-நாம்
பாடிப் புகழ்வோம், நேசா!
அவனிதனிலே மறி மேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்.
எருசலேமின் பதியே -சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே!
பன்னிரண்டு சீஷர் சென்று-நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க,
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத.
குருத்தோலைகள் பிடிக்க,-பாலர்
கும்புகும்பாகவே நடக்க,
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற.
DOWNLOAD PPT