தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க-மனு
ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார்.
வந்த பின் தன் தந்தையர்க் குகந்தபடியே-பர
மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார்.
தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே,-பரி
சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே.
புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே-பல
போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார்.
பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள்-அற்
புதங்கள் செய்துசிதங்கள் ஓதிக் கதங்களை வென்றார்.
DOWNLOAD PPT