எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
என் கண்கள் காண வேண்டும்
தேவா கதறுகிறேன்
தேசத்தின் மேல் மனமிரங்கும்
சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே
தெருத் தெருவாய் என் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே
கோடி மக்கள் சிலுவையைத் தேடி
ஓடி வந்து சுகம் பெறணும்
ஒருமனமாய் சபைகளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே
ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே
துதி சேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை
மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே
ஸ்தேவான்கள் எழும்பணுமே
தேவனுக்காய் நிற்கணுமே