உம்மை போற்றி பாடுவோம்
எங்கள் உயர்ந்த கன்மலையே
பெருவெள்ளம் மதிலை மோதி
பெருங்காற்று அடிக்கையில்
எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
பெருங்கன்மலையின் நிழலே
செங்ககடலும் பிளந்து போகும்
யுத்த சேனையும் அமிழ்ந்திடும் -எங்கள்
பராக்கிரமே எங்கள் பெலனும் நீரே
ஜெயம் எடுப்போம் உம்மாலே
என்னை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
வைத்து வைத்ததும் நீரல்லவோ
கன்மலை தேனும் வடியும் எண்ணெயும்
தருவது நீரல்லவோ