வானம் பூமியோ? பராபரன்
மானிடன் ஆனாரோ? என்ன இது?
ஞானவான்களே, நிதானவான்களே,-என்ன இது?
பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்
பொறுமைக் கிருபாசனத்துரை,
பூபதி வந்ததே அதிசயம்!-ஆ! என்ன இது!
சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,
நித்ய பிதாவினோர்ம
கத்துவக் குமாரனோ இவர்?-ஆ! என்ன இது?
மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,
நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது?
வேறே பேரல்ல, சுரர் விண்ணவர் ஆருமல்ல;
மாறில்லாத ஈறில்லாத
வல்லமைத் தேவனே புல்லில் கிடக்கிறார்! – ஆ! என்ன இது?
சீயோனின் மாதே, இனி க்ஷெணந்தரியாதே,
மாயமென்ன? உனக்குச் சொல்லவோ?
வந்தவர் மணவாளனல்லவோ?-ஆ! என்ன இது?
DOWNLOAD PPT