ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன் அவர் ஆளுகையின் நீதி அன்பின் வாழி சாற்றுவேன்
உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன் மன உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன்
கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை மதி கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை
வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன் பொல்லா
மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன்
மற்றவனை ஏசி வாயால் குற்றங்கள் செய்யும் துஷ்ட
மாந்தர் மேலே பற்றாமலென் பாந்தவம் நையும்
பொய்யர்களை என்னுடனே உய்ய ஒட்டேனே மகா புரளிசெய்யும் எத்தர்களின் திரளில் கிட்டேனே
சீருடையோர் பேரில் அன்பு கூருவேனே நல்ல
சீரொழுகு சான்றோர் தயை சேருவேனே