ஆதி யாம் மகா ராசனே எந்த வேளையும்
அடிய னோடிரும் ஈசனே
தீதில்லா சருவேசா தேசுறும் பிரகாசா
பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால்
பாவி பெலனால் ஐயனே நின்றால் என்னைப்
பகைவர் ஜெயிப்பார் மெய்யனே
தேவா துணை நீர் ஐயனே சிறியனிடம்
சேர்ந்தே வசியும் துய்யனே
மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும் காவலன் நீரே
சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும்
இரக்கம் பொழிய வாருமே கிருபையாக
இறைவா என்னிடம் சேருமே
உருக்கம் நிறைந்த நீருமே அனவரதம்
உந்தம் அருளைத் தாருமே
செருக்காய் எம்மீ திகலோர் சேதம் செய்ய நினைக்கும்
திருக்கை அகற்றி என்னில் தினமும் அருள்புரியும்