இயேசுவை எழுப்பிய அதே வல்லமை என்னையும் எழுப்புமே
சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பெற செய்யுமே
என்னை உயிர்ப்பிக்கும் ஆவியே
என்னை உயிர்ப்பெற செய்யுமே
1.சாம்பல்கள் எல்லாம் சிங்காரமாகிடுமே
உலர்ந்த எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே
என் பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
2.மாம்சத்தின் கிரியைகள் என்னில் மறைந்திடுமே
மகிமையின் சாயல் என்னில் மலர்ந்திடுமே
என் பலத்தினாலும் அல்ல
என் புயத்தினாலும் அல்ல
உம் ஆவியாலே கூடாததொன்றுமில்ல
DOWNLOAD PPT
–