ஆரணத் திரித்துவமே எமை
ஆண்டருள் மகத்துவமே
பூரண தேவ பிதா சுதன் ஆவியே
பொன்னுலகத்தெழும் உன்னதமான
போத க்ருபையா பத்ததி நீதிச் சுடரே நித்திய
அன்றன்றை அப்பத்தைத் தாரும் எங்கள்
ஆபத் தனைத்தையும் தீரும்
இன்றும் என்றெங்களைச் சேரும் திரு
இரக்கத்தால் முகம் பாரும்
நன்றி கெட்டோர்களைக் கொன்று போடாதேயும்
நம்பரா கருணாம்பரா
ஞானத் தனு மானத்தொளிர்
மேன்மை திவ்விய பானத்தருள்
மூவர் ஒன்றான யெகோவா உயர்
முக்ய கிருபையின் தேவா
மேவி அடியாரைத் தேவா பல
வெவ்வினையினின்றும் கா வா
பாவிகள் நாங்கள் ஏவையின் மக்களே
பக் ஷமே பரம பொக் ஷமே
பாடும்புகழ் நாடும்பரி
வோடும் தயை நீடும்பரா