அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனைத் தலைவராம்
இயேசுவின் பொற்தளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்
எல்லா ஜாதியார் எல்லா கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர்
வெள்ளை அங்கியை தரித்துக் கொண்டு
வெள்ளை குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் பிதாவின் முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று
தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்றும் நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள்
இனி அவர்கள் பசியடையார்
இனி அவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை
ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை
அற அகற்றி துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே