தேவ வசனத்தையே நீராவலுடன் கேட்டதனின்
செய்கைக்காரருமாகுங்களேன் செவ்வையாவே
செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலை மறந்தான்
ஐயோ அவன் நிர்ப்பாக்கியனே அருளில்லானே
பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் நிலைத்துத்
தாரணியில் நற்செய்கையுள்ளோன் தகுபாக்கியனே
தேவமகிமை நவிலும் நாவையடக்காமலே தான் தீங்குற இதயம் எத்துவோன் தெய்வபத்தி யவம்
அநாதர் விதவைகளை ஆதரித்துல காற்கறை
அணுகாது காப்பதே பத்தி அம்பர தந்தை முன்
கிருபை விண்ணப்பங்களின் திரு ஆவியை யூற்றுவன்
பிதாவை யாவியுண்மையிலும் சதா பணிவீர்