தேவா திருக்கடைக்கண் பார் ஐயா
வினைதீர் ஐயா வினைதீர் ஐயா
கோவாய் உலகில் வந்த யோவா சச்சிதானந்தா
மேவிய தயை நிரம்பி ஆவலுடனே விரும்பி
பாவி எனையே திரும்பிப் பார் ஐயா ஸ்வாமி
பொல்லா உலகம் பகை எல்லாச் செல்வமும் புகை வல்லா உனின் கிருபை கூர் ஐயா ஸ்வாமி
அந்தி சந்தியும் விடாமல் தந்திரப் பசாசடாமல் எந்த விதமும் கெடாமல் ஆளுமே ஸ்வாமி
சர்ப்பனை யதாய் உலகம் இப்படித் துரோகம் செய்தால் எப்படி அடிமை கரை யேறுவேன் ஸ்வாமி
எத்தனை துயர் அடைந்தேன் மெத்தவும் மன துடைந்தேன்
சித்தம் இரங்காய் என் மணவாளனே ஸ்வாமி
இந்தத் தினத்தில் எனக்குத் தந்த சுகத்துக்குனக்கு
வந்தனம் அனந்தனந்தம் ஸ்தோத்திரமே ஸ்வாமி