தயை கூர் ஐயா என் ஸ்வாமீ பாவி நான்
தயை கூர் ஐயா நின்தாசன் ஏசையா
தயை கூர் ஐயா
ஜெய மனுவேலன் நய அனுகூலன்
சீரா தீரா அதிகாரா திருக்குமார
சேயர்கள் பணிவிடை மேவிய நேச வி
லாச க்ருபாசன யேசு நரேந்திரா
வானத்திலிருந்து வந்து ஞானத் துரு உவந்து
வளமை கொண்டு கிருபை விண்டு குடில் கண்டு
மாடடை வீடதி னூடு புல் மேடையில்
நீடின போதினி மோடியதாமோ
தந்தை பிதாவின் மைந்தன் மைந்தர் வடிவமாகி
தராதலமேவி வா பாவி எனக் கூவி
சாங்கமதாய் அருள் ஓங்கி மகா பெரு
ஈங்கிசையாய் உயிர் நீங்கினதாலே நீ
தேவ ரட்சிப்பனைத்தும் பாவிகட்காய் விளைத்தும்
சிலுவையில் மாண்டும் துயர் பூண்டும் சிறை மீண்டும்
ஜீவனோடதிபதி பராபரனார் வல
பாரிசமே அர சாளும் இந் நேரம் நீ