என்னோ பல நினைவாலும் நீ உன்னை அலைக்கழிப்பாய்
மன்னர்கள் மன்னவன் ஆகிய யேசு உன் மன்னவராய் இருக்கையிலே
அன்னை யிடத்துருவாய் உன்னை அமைத்த தந்தை அல்லவோ பின்னும் ஆகாரமும் உடையும் ஜீவனும் அளிப்பதவர் அல்லவோ
மாதானவள் சேயை ஒரு வேளை மறந்தாலும் உன்னை மறவோம் ஒருகாலும் என வார்த்தை கொடுத்தாரே
இஸரேலரைக் காப்போர் உறங்கிடுவோர் என நினையேல் அவர் நிசமாக உன் வலப்பாகத்தில் நிழல் ஆவர் என்றறிவாய்
சிங்கங்கள் பட்டினியாய் இருக்கக் கண்டேன் தேசம் எங்கும் சுற்றிப் பார்த்தும் தேவ
சேயர்கள் பட்டினியாகக் காணேன் என்ற திவ்ய உரையும் பொய் யாமோ
தேகமும் கெட்ட உலகமும் பேயும் திரண்டு உனைப் பொருதாலும் அதை ஜெயித்தயேசு உன் மன்னவ ராகையில் சிந்தனை வேறென்ன உனக்கு
தேவ பிதா நின் பிதாவும் இயேசு நின் சிநேகிதரும் சுத்த ஆவி உன்றன் தேற்றர வாளனும் ஆவதைப் பார்க்கிலும் தேவை நினக் கொன்றும் இல்லையே