காயங்கள் மேல் காயங்கள்
வேதனை மேல் வேதனை
சிலுவையை சுமக்கும் காட்சி
எல்லாம் எனக்காக
மகிமையே மாட்சிமையே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம்
பரிந்து எனக்காய் பேசினீர்
உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்
பாவி என்று பாராமல்
புது வாழ்வு எனக்கு தந்தீர்
தாகம் என்று சொன்னீரே
கசப்பான காடி தந்தேனே
அதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்
என்னை மதுரமாய் மாற்றிடவே