மறவாதே மனமே தேவ சுதனை
மறவாதே மனமே ஒருபொழுதும்
திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து
அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை
விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு
மண்ணில் ஏழையாக வந்த மானு வேலை
கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ
மட்டில்லாத பரன் மானிடனான தயவை
நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அளித்திவ்
வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும்
நித்தம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள்
அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை
வருடம் வருடம் தோறும் மாறாத் தமதிரக்கம்
பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை