நெஞ்சே நீ கலங்காதே சீயோன் மலையின்
ரட்சகனை மறவாதே நான் என் செய்வேனென்று
வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும்
வினைமேல் வினை வந்தாலும் பெண்சாதி பிள்ளை மித்ரு சத்ருவானாலும்
மனையொடு கொள்ளை போனாலும் வானம் இடிந்து வீழ்ந்தாலும்
பட்டயம் பஞ்சம் வந்தாலும் அதிகமான
பாடு நோவு மிகுந்தாலும் மட்டிலா வறுமைப் பட்டாலும் மனுஷர் எல்லாம் கைவிட்டாலும்
சின்னத்தனம் எண்ணினாலும் நீ நன்மை செய்யத் தீமை பிறர் பண்ணினாலும்
பின்னபேதகம் சொன்னாலும் பிசாசு வந்தணாப்பினாலும்
கள்ளன் என்று பிடித்தாலும் விலங்கு போட்டுக்
காவலில் வைத் தடித்தாலும்
வெள்ளம் புரண்டு தலை மீதில் அலைமோதினாலும்