நெஞ்சமே தள்ளாடி நொந்து
நீ கலங்காதே கிறிஸ்
தேசுவே உனக்கு நல்ல
நேச துணையே
தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக உன்னை தாக்கியே பகைஞராக நின்றபோதிலும்
அன்னை தந்தை ஆனவரும் பின்ன பேதமாய் உனை அங்கலாய்க்க விட்டெளிஞன் ஆன போதிலும்
ஜீவனம் இழந்து துன்பம் மேவினாலும் மா
சிறுமையாய்ச் சகிக்கொணா வறுமை கொண்டாலும்
பஞ்சமும் பசியும் வந்து கெஞ்ச வைத்தாலும் மிகு பாரமாய்ச் சுமை உன் மேலே பற்றி நின்றாலும்
கெட்ட நோயிலும் நீ அகப் பட்டுழன்றாலும் எந்தக் கேடுகள் உன்மேலே வந்து மூடினாலும்
ஆன வீடு தானும் கொள்ளை ஆன போதிலும் கிறிஸ் தண்ணலே உனக் கெல்லாம் என் றெண்ணி நிறைவாய்