நித்தம் முயல் மனமே பரி
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ
அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
சத்திய வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி
அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
ஆசையாய்க் கழி நீ அவரைப்போலாவாய்
தேவன்றன் பிள்ளைகள் யாவரையும் நேசி
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய்
யேசுவே உன்றனை என்றும் நடத்துவார்
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின்செல்லு
எந்த எண்ணத்தையும் யேசுவின் கீழ் ஆக்கி
உன்றன் உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய்
மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த
மேலான வாழ்வுக்குத் தக்கவனாகுவாய்