நித்திய கன்மலை எனக்காய்ப் பிளந்தது
நேயமாய் மறைந்துய்குவேன்
சுத்த உதிரமும் நீரும் வடிந்தது
தூயன் விலாவினின்று அதால்
சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்
சுகமாக வாழ்வேனே
என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு
ஈடு நான் செய்வதில்லை தினம்
சிந்துகினிங் கண்ணீர் ஏதேது செய்கினும்
தீங்கு செய்வதில்லை
கொண்டுவரக் கையிலொன்று மில்லை உன்
குருசுடன்தான் ஒன்றினேன் குருதி
கொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்
கோவே அல்லாது துய்ந்திடேன்
ஜீவனிருக்கையில் சாவில் கண் மூடுகையில்
தெரியாவுலகிற் செல்கையில் ஒளி
மேவு பத்ராசன் மீதுனைக் காண்கையில்
விரைந்துனில் மறைந்துய்குவேன்