நான் உம்மை தெரிந்துகொள்ளவில்லை
நீர் என்னை தெரிந்துகொண்டீரே
உலக்கிற்காய் வாழ்ந்த என்னை
உந்தனின் சேவை செய்ய
பெயர் சொல்லி என்னை அழைத்தீரே
அழைத்தீரே என்னை அழைத்தீரே
உம் ஊழியனாய் என்னை அழைத்தீரே
1.ஊழிய அழைப்பில்லை
தாலந்தும் இவனுக்கில்லை
தரமற்ற வார்த்தைகளால்
என்னை நோக்கி வீசினாலும்
அழைத்தது இவர்களில்லை
அழைத்தது நீர் என்பதால்
அழைத்த உம் கரம் பற்றி ஓடுகிறேன்
2.கிறிஸ்துவின் அன்பை விட்டு
என்னை ஒன்றும் பிரித்திடாது
தொடர்ந்து நான் முன்னேறி சென்றிடுவேன்
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
ஊழிய பாதை விட்டு பிரித்திடாது
DOWNLOAD PPT