பரனே திருக்கடைக்கண் பாராயோ என்றன்
பாவத்துயர் அனைத்தும் தீராயோ
திறம் இலாத எனை முனியாமல் யான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல்
மாய வலையில் பட்டுச் சிக்காமல் லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் பரனே
அடியேனுக் கருள் செய் இப்போது உன
தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது
வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ என்றன்
மனது களிக்க வர மாட்டாயோ
ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம் எனக்
கிரக்கம் செய்யும் உமக்கே தோத்ரம்