தேன் இனிமை யதிலும் சத்திய வேதம்
திவ்யமான மதுரம்
ஞானமது நிறையும் வேதமதில் எனக்கு
நாதனே அருள்ஆசை அனுதினம் ருசித்திட
ஆரணம் அதி புனிதம் களங்கம் இல்லாத சுகிர்த அமுதம்
பூரணமாய் அதைத் தான்உட்கொண்டே வரில் பொன்னுல கதற் கேற்ற தன்மை உண்டாக்குமே
பாதைக்குரிய தீபம் மெய் வேதம்
பற்றிடில் மிகு லாபம்
வாதை செய்திடும் பல சோதனைகளும் எதிர்
வரில் அனைத்தும் வெல்லத்தகும் படைக்கல மதே
விண்ண தழிந்தாலும் அதோ டிந்த
மேதினி ஒழிந்தாலும்
திண்ண மதாய் என்றும் சிறந்திலகும் ஜீவ
திருமறை எனில் தங்கிப் பலன் தர அனுக்ரதி
எத்திசையிலுமுள்ள நரர் யாவரும்
ஏகன் நின் அறிவு கொள்ள
சுத்த சுவிசேஷம் துலங்கிப்ர காசிக்கத்
தூய நல் ஆவியை யாவர்க்கும் ஈந்தருள்