வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே
சூரன் சதித்துன் மீது வலை வீசினாலும்
சோராதே ஏசுபரன் தஞ்சம் விடாதே
உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்
உறுதிவிட்டயராதே நெறி தவறாதே
பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே
தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ அன்பு கொள்ளவர் மீதே
மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்
மருள விழாதே நல் அருளை விடாதே
வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ
வானவனை முற்றும் தான் அடைவாயே