வெள்ளை அங்கிகள் தரித்த
விமல முத்தர் இவர் யார்
கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக்
கருணைவள்ளல் முன்நிற்கும்
நானாதிக்கிலுமிருந்து
நயந்து வந்தவர் இவர்
கோணாது துன்பக் கடலில்
குளித்துவந்தவர் இவர்
குருத் தோலைகள் பிடித்துக்
கொற்றவனைச் சூழநிற்கும்
பெருத்த கூட்டத்தார் இவர்;
பேரன்பின் அடியார்களாம்
ஆட்டுக் குட்டியாலே மீட்பை
அடைந்த உத்தமர் இவர்
தேட்டமுடனே நாயனைச்
சேவித்து நிற்கின்றார் நித்தம்
பசிதாகம் யாவுமற்றார்
பாக்கிய நிலைமை பெற்றார்
உச்சித மோட்சத்தின் கண்ணீர்
உகுக்கா வாழ்வினை யுற்றார்