வேளை இது சபையே நித்திரையை
விட்டுஎழுந்திருக்க நல்ல
நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்
காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட
நாம் விசுவாசிகளாய்த் திரும்பின
நல்வேளை தன்னிலுமே
ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு
அண்டையிற்கிட்டிய தென்றறிந்தோமல்லோ
பாவஇருள்விடுத்தோம் பகலதுக்
கான வொளியடுத்தோம்
மேவுமந்தகார வேஷக்கிரியையை
விட்டுவெளிச்சப் பேராயுதம் பூண்டிட
தானவனாலயமே உன்தனுட
சரீரமும் ஆத்துமமும்
நானிலமீதேசு நாயகர்க்கேற்காமல்
மேனியைப்பேணும் விருப்பமாகாது
கத்தரினாலயத்தைக் கொடுப்போனைக்
கர்த்தர் கெடுப்பதல்லால்
நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி
நீடூழியும் நரகாழியில் வேவானே