வேறு ஜென்மம் வேணும் மனம்
மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும்
கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே
பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய
மானிடரின் அபிமானத்தினாலல்ல
வானவரின் கிருபா தானமாய் வரும்
ஒன்றான ரட்சகர் வென்றியை நம்பி
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய
மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்
மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்
விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்