வேத புத்தகமே வேத புத்தகமே
வேத புத்தகமே விலை பெற்ற செல்வம் நீயே
பேதைகளின் ஞானமே பெரிய திரவியமே,
பாதைக்கு நல்தீபமே பாக்யர் விரும்புந் தேனே
என்னை எனக்குக் காட்டி என் நிலைமையை மாற்றிப் பொன்னுலகத்தைக் காட்டிப் போகும் வழி சொல்வாயே
துன்பகாலம் ஆறுதல் உன்னால்வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய் என்றும்நம்பின பேர்க்கே
பன்னிரு மாதங்களும் பறித்துண்ணலாம் உன்கனி உன்னைத் தியானிப்பவர் உயர்கதி சேர்ந்திடுவார்