ஆரிடத்தில் ஏகுவோம் எம் ஆண்டவனே
ஆரிடத்தில் ஏகுவோம்
ஆரிடத்தில் ஏகுவோம் சோராநித்திய ஜீவ
நேரார் வசனங்கள் உம்சாரில் இருக்க இனி
பாவிகளாம் எங்களுக்கு உமையல்லாது
தாவரமில்லை நீரே
ஜீவன் தனையுடைய தேவ குமாரனாக
மேவு கிறிஸ்தென்றுமையே ஆவலுடன் நம்பினோம்
போனவர்போல நாங்களும் உமை நெகிழ்ந்து
போவதில்லை பரமனே
ஞானோபதேச குருவான உம்மை அண்டின
ஈனர் இனிதுற்ற உமது தானமதைப் பிரிந்து
உற்றார் சிநேகர் யாரையும் எம் வீடுவாசல்
உள்ள பொருளனைத்தையும்
முற்றாய் வெறுத் தும்மையே பற்றியிருக்க நாங்கள்
தெற்றாய் இனியும்மைநன்றி யற்றோர்போலே நெகிழ்ந்து
பொன் னுலகத் திருந்தெம்மைப் புரக்க வந்த
புண்ய நாதன் நீரல்லவோ
பின்ன பேதகமற்ற மன்னவனே உமது
நன்னய முகப்பிரசன்ன மதனை விட்டு