யேசுநாதனே இரங்கும் என் யேசு நாதனே
ஆசைக் கிறிஸ்தென தன்புள்ள நேசனே
அருளே தெருளே பொருளே
ஆவல் ஆகினேன் மகா பிரலாபம் மூழ்கினேன்
ஆயா ஆயா தூயா ரட்சியும்
ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன்
அருமைரட்சகனே உனை அல்லாமல் ஆதரவார் ஐயா
ஆத்துமநாயகன் நீ என்னக்கல்லவோ அன்புகூர் மெய்யா
தருணம் தருணம் கைவிடாதேயும்
தலைவா நலவா வலவா
தாமதியாதே கிருபைசெய்யும் சாமி இப்போதே
தாதா நாதா நீதா நீகா
தருமப்பிர காசனே பரம சருவேசனே
ஐந்துகாயத்தின் கிருபைக்கோட்டையில் அடைக்கலந் தாவே
ஆதாமின் பாவத்தாலே மானிடன் ஆன மெய்வாழ்வே
விந்தைக்கிருபை அளிக்கவேண்டும்
விமலா நிமலா அமலா
வேறுபண்ணாதே மிகும்சீறு மாறுநண்ணாதே
மேலா கோலா நூலா நீயே
விரும்பிச்சேரும் கோவே திரும்பிப்பாரும் தேவே
உன்னைப்போல் நரர்க்கார் பாடுபட்டது உரிமைச் சீமானே
உத்தமமேய்ப்பனே சத்தியமீட்பனே உண்மைக் கோமானே
என்னை ரட்சிப்ப துன்கடன் அல்லவோ
இறையே நிறையே பொறையே
ஏதம் இல்லானே அடியாரைத் தீது சொல்லானே
ஏகா வாகா ஆகா இரட்சியும்
இரக்கமே உன்தஞ்சம் நெருக்கமே பிரபஞ்சம்