கண்களை ஏறெடுபேன் – மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுபேன்.
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும்.
காலைத்தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
காலைத்தள்ளாட வொட்டார்,
வேலையில் நின்றிஸ்ர வேலரைக் காத்தவர்
காலையும் மாலையும் கண்ணுறங்காரவர்.
பக்க நிழல் அவரே – எனை ஆதரித்திடும்
பக்க நிழல் அவரே
எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டென்னை அக்காவல் புரியவே
எல்லாத் தீமைகட்கும் என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர்
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal songs, kangalai yeredupen songs, kangalai yeredupen songs lyrics