தலைமுறை தலைமுறையாய்
உந்தன் அன்பு என்றும் மாறாதது
தலைமுறை தலைமுறையாய்
நீரே ஆளுகை செய்பவரே
ஆத்துமாவை ரட்சித்தவர்
எல்லா கொடுமைக்கும் தப்புவித்தவர்
ராஜாதி ராஜன் அவர்
என்னை என்றென்றும் உயர்த்துபவர்
கிருபையினால் ஆட்கொண்டீரே
கிருபையே உம்மை உயர்த்திடுவேன்
1. பள்ளத்தாக்கின் நடுவில் நான் நடந்திட்ட நேரம்
புது ஒளியாக என் முன் சென்றீர்
நதிகளை கண்டு நான் திகைத்திட்ட நேரம்
என்னை மூழ்காமல் கடக்க செய்தீர்
எதிரியின் கண் முன்பே உயர செய்தீர்
கன்மலையின் மேல் நடக்க செய்தீர்
2. மலைகளைக் கண்டு நான் கலங்கிட்ட நேரம்
அதை பதராக்கி பறக்க செய்தீர்
ரதங்களை கண்டு நான் பயந்திட்ட நேரம்
யுத்தங்களை ஜெயிக்க செய்தீர்
உன் சாயலாய் மீண்டும் மாற்றி விட்டீர்
உம் பிரசன்னத்தில் வாழ செய்தீர்
Thalaimurai ,Thalaimurai lyrics songs, Thalaimurai song lyrics, Thalaimurai Lyrics Song Chords PPT - தலைமுறை தலைமுறையாய் , Vijay Aaron
true
true