ஆனந்த கீதம் பாடி
உம்மை நான் ஆராதிப்பேன்
கைத்தாள ஓசையோடு
உம்மை நான் போற்றிடுவேன்
மகிமை என் ராஜா உமக்கே
துதிகள் எப்போதும் உமக்கே
ஜெயங்கள் எந்நாளும் உமக்கே
மகிழ்ந்து உம் நாமம் உயர்த்துவேன்
1.உந்தன் அருகினில் நெருங்கிடும்
வேளையில் நீங்கும் எந்தன் துக்கம்
என் உன்னதர் நேசர் இயேசுவின் அன்பால்
பொங்கும் எந்தன் உள்ளம்
சர்வ வல்ல தேவன் தந்தார் சொந்த ஜீவன்
பாவ சாப ரோகம் தீர்த்தார் எந்தன் வாழ்வில்
மரணத்தை ஜெயமாய்
விழுங்கியே உயிர்த்தாரே
2. எந்தன் வாழ்வில் நீர் செய்திட்ட
நன்மைகள் ஆயிரம் ஆயிரம்
இரட்சிப்பின் பாத்திரம் எடுத்து நான்
தொழுவேன் இயேசுவே ஸ்தோத்திரம்
எந்தன் ஜீவ காலம் வைத்தேன்
உந்தன் பாதம் - ஆவி ஆத்ம தேகம்
ஆளும் தேவா என்றும்
பரிசுத்த பாதையில் நடத்திடும் அனுதினம்
Anantha Geetham Padi, Anantha Geetham Padi lyrics songs, Anantha Geetham Padi song lyrics, Anantha Geetham Padi Lyrics Song Chords PPT -ஆனந்த கீதம் பாடி, tamil christian songs lyrics
TRUE
TRUE