அன்பரின் அன்பு தூய நல்அன்பு
தேடி வந்த அன்பு
பாவியை மீட்க பரிசுத்தமாக்க
பாரில் வந்த அன்பு
1. அன்பை நினைத்தால் எந்தனின் கண்கள்
ஆனந்தக் கண்ணீர் சொரிந்திடுதே
துதிக்குது துதிக்குது துதிக்குது என் ஆத்துமா
தூயரின் அன்பில் நிலைத்திடுதே.
2.பாதை விலகும் போது தீபத்தைக்காட்டி
பேதை என் முன்,பின் வந்தாரே
தேவனை துதிக்க துதித்து பாடிட
தூய நல் ஆவி ஈந்தாரே.
3.தூய ஜீவியம் துதியின் ஜீவியம்
பாரில் செய்ய பெலன் அளித்தாரே
தூய தூதருடன் தூய கீதம் பாட
ஏழை என்னையும் சேர்த்தாரே.
4.தேனினும் இனிய தேவக்கீதங்கள்
பாட தம் அன்பால் அளித்தாரே
கோடி கோடியாய் அல்லேலுயா
பாடி மகிழ்வேன் பரலோகில்.
5.பரலோகத்தில் பரிசுத்தவான்கள்
துதித்திடும் துதி இங்கு கேட்டிடுதே
நரர் உம் ஆவியில் துதித்திடும் துதிகள்
பரலோகத்தில் சேர்ந்திடுதே.
Anbarin Anbu Thooya Nal Anbu, Anbarin Anbu Thooya Nal Anbu lyrics songs, Anbarin Anbu Thooya Nal Anbu song lyrics, Anbarin Anbu Thooya Nal Anbu Lyrics Song Chords PPT - அன்பரின் அன்பு தூய நல்அன்பு , tamil christian songs lyrics
true
true