அன்பே என் அன்பே என் ஆருயிரே
ஆருயிரே என் ஆருயிரே
என் வாழ்க்கை உமக்கே அர்ப்பணிக்கிறேன்
உம் ஜீவன் எனக்குள் வந்தததால்
இனி நானல்ல நீரே எனக்குள் பிழைப்பீரே
என் ஆசை பாசம் பற்று எல்லாம் நீரே நீரே
உம் கண்ணை என் மேல் வைத்து
கண்ணிமைப்போல் பாதுகாத்து
என் குரலை கேட்டால் உடனே
வந்து நோக்கிப் பார்ப்பீரே
உம் சமுகம் எந்தன் தஞ்சம்
உம் வார்த்தை எந்தன் அப்பம்
உம் குரலை கேட்கும் வரை
நான் காத்திருப்பேனே
உள்ளங்கைக்குள் என்னை வைத்து
சத்துரு கண்ணை குருடாக்கி - தோளின்
மேலே அமர வைத்து சுமந்து வந்தீரே
பேதை எனக்கு ஞானம் தந்து
உம் அறிவை போதிக்க வல்லமை ஈந்து
செம்மையான பாதையிலே
நடத்துகின்றீரே
சிக்கிமுக்கி தடுமாறி கலங்கிட்ட
வேளையிலே பயப்படாதே
என்றணைத்து நம்பிக்கை ஈந்தீரே
தலைகுனிந்து வெட்கப்பட்டு
அவமானம் சூழ்ந்த போதும்
உயர உயர உயர்த்துவேன்
என்று கரம் பிடித்தீரே
Anbe En Anbe En Aaruyire, Anbe En Anbe En Aaruyire lyrics songs, Anbe En Anbe En Aaruyire song lyrics, Anbe En Anbe En Aaruyire Lyrics Song Chords PPT - அன்பே என் அன்பே என் ஆருயிரே , tamil christian songs lyrics
TRUE
TRUE