நீர் சகலத்தையும் புதிதாக்கினீரே
என் இருள் நீக்கவே நீரே இருளானீரே
நான் தனித்து நின்ற போது
நான் ஒளிந்து கொண்ட போது
உம் கிருபை எனை சூழ்ந்து கொண்டதே
நான் தனித்து நின்ற போது
நான் ஒளிந்து கொண்ட போது
உன் கிருபை எனை உயர்த்தி வைத்ததே
அழியாத கிருபை இது
அன்பான தயவு இது
என்னை ஆளும் கிருபை இது
என்னை நடத்திடும் கிருபை இது
நீதிபரரே உம் நீதியை தந்தீரே
உம் ஜீவன் என்னில் வைத்து என்னை வாழ வைத்தீரே
என் பாவம் சாபம் தரித்திரத்தை முடித்து விட்டீரே
வரும் காலம் யாவும் வாழ உந்தன் ஜீவன் தந்தீரே
சீற்றங்கள் மத்தியில் கடல் கொந்தளிப்பின் நடுவில்
நான் வாழ உயர்ந்து நடக்க உம் கிருபை தந்தீரே
என்னை அழிக்க நினைத்த சத்ருவின் தலையை மிதித்து விட்டீரே
தலை நிமிர்ந்து வாழ உயர்ந்து வாழ கிருபை செய்தீரே
Azhiyaatha Kirubai lyrics songs, Azhiyaatha Kirubai song lyrics, Azhiyaatha Kirubai, Azhiyaatha Kirubai Lyrics Song Chords PPT - அழியாத கிருபை Vijay Aaron , Jasper Gershom
TRUE
TRUE