ஏழையை மீட்ட ஏசுவே சுவாமி
அடிமை சரண் புகுந்தேன்
நீசனா மென்னைத் தேடினீரே
காசினியிலன்பு கூர்ந்து
என் பாவம் போக்க எடுத்தீர் இறைவா
ஈனக்கோலமதை
என்னதானிதற்கீடு செய்குவேன்
அன்னையே விளம்புவீரே
தூரமாய்க கிடந்தே தொல்லைகளடைந்தே
தூயா உமை மறந்தேன்
தூக்கினீர் என்னைச் சேற்றினின்றே
தேற்றினீரும்மாவியாலே
விண்ணை நீர் மறந்தீர் விரோதியாமெனையே
விண்ணில் சேர்த்திடவே
வேண்டுதல் கேளும் வேந்தனே
அருள் தேவனே சகாயனே
பாவத்தின் கூலி மரணமாம் பயத்தை
ஜெயித்தவர் யேசுகோமான்
ஜீவனும் சமாதானமுமீந்து
தேவனின் சமூகமீந்தார்
மாயமாம் உலகின் வேஷத்தை வெறுத்தேன்
மன்னா உன் அன்பினாலே
சொன்னீரே மகிமையில் சேர்ப்பதாய்
உன்னதா உம் வாக்கை நம்பி
Ealaiyai Meeta Easuvea Swamy, Ealaiyai Meeta Easuvea Swamy lyrics songs, Ealaiyai Meeta Easuvea Swamy song lyrics, Ealaiyai Meeta Easuvea Swamy Lyrics Song Chords PPT - ஏழையை மீட்ட ஏசுவே சுவாமி, tamil christian songs lyrics
TRUE
TRUE