என் மனது துடிக்குது
குலை பதைத்து நோகும்
தெய்வ மைந்தனின் சவம்
கல்லறைக்குப் போகும்
ஆ அவரே மரத்திலே
அறையப்பட்டிறந்தார்
கர்த்தர்தாமே பாவியின்
சாபத்தைச் சுமந்தார்
என் பாவத்தால் என் தீங்கினால்
இக்கேடுண்டாயிருக்கும்
ஆகையால் என்னுள்ளத்தில்
தத்தளிப்பெடுக்கும்
என் ஆண்டவர் என் ரட்சகர்
வதைந்த மேனியாக
ரத்தமாய்க் கிடக்கிறார்
என் ரட்சிப்புக்காக
வெட்டுண்டோரே ஆ உம்மையே
பணிந்தென் ஆவி பேணும்
ஆகிலும் என் நிமித்தம்
நான் புலம்பவேணும்
குற்றமற்ற கர்த்தாவுட
அனலாம் ரத்தம் ஊறும்
மனஸ்தாபமின்றி ஆர்
அதைப் பார்க்கக்கூடும்
ஆ இயேசுவே என் ஜீவனே
நீர் கல்லறைக்குள்ளாக
வைக்கப்பட்டதைத் தினம்
நான் சிந்திப்பேனாக
நான் மிகவும் எந்நேரமும்
என் மரணநாள் மட்டும்
என் கதியாம் இயேசுவே
உம்மை வாஞ்சிக்கட்டும்
En manathu thudikkuthu lyrics songs, En manathu thudikkuthu song lyrics, En manathu thudikkuthu Lyrics Song Chords PPT -என் மனது துடிக்குது
true
true