Kartharin Vedhathil Iravum Pagalum Lyrics Song Chords PPT - கர்த்தரின் வேதத்தில் இரவும் பகலும்

கர்த்தரின் வேதத்தில் இரவும் பகலும்
தீயானமாய் இருப்பவன் பாக்கியவான் -2
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு
தன் காலத்தில் தன் கனியை கொடுப்பான்
இலையுதிராதிருக்கும் மரத்தை போலிருப்பான்
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் -2

1. வாழ்க்கையின் எல்லா காரியங்களிலும்
கர்த்தருக்கே முதலிடம் கொடுப்பான்
வார்த்தையின் தேவனின் நோக்கத்திற்காய்
வாழ வாஞ்சையாய் இருக்கிறவன்
முதற் பலனை கொடுப்பான்
அதின் பலனை அறுப்பான்
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் -2

கிருபை பொருந்திய தேவனின் வார்த்தைகள்
அவனுக்குள் வாசம் செய்வதினால் 2.
ஞானம் விவேகம் நல் ஆலோசனைகள்
கண்டடைவான் தினம் தினமே
விசுவாசம் வளரும் தைரியம் உண்டாகும்
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்

வலப்புறம் இடப்புறம் சாயாமல் கர்த்தரின்
வார்த்தையை நோக்கியே பயணிப்பவன்
வல்லமையின் தேவன் அவனுடனே
சென்றடைவான் அக்கரையை - துதி
அவனின் வாயில் ஜெயம் அவனின் வாழ்வில்
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்

Kartharin Vedhathil Iravum Pagalum lyrics songs, Kartharin Vedhathil Iravum Pagalum song lyrics, Kartharin Vedhathil Iravum Pagalum Lyrics Song Chords PPT - கர்த்தரின் வேதத்தில் இரவும் பகலும்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create