கொடுங் கொல்கொதாவின் கொடு முடியில்
கடுங்காயப்பட்ட நேசரைக் கண்டேன்
அக பாரத்தால் நான் பணிந்து நின்றேன்
மகனே இது உனக்காய் என்றார்
ஆஹா இன்பம் இன்பம் இனியென்றும் துன்பமில்லை
எந்தன் மகா இன்பராம் என் இயேசு வரும் நாளதினிலே
இனி நான் என்ன செய்ய என்றேன்
கனி தா என்று கனிவாய் சொன்னார்
இனி தாமதமோ நாதா என்றேன்
தொனி கேட்குங்காலம் சமீபம் என்றார் - ஆஹா
நல் நேசருக்காய் கொடி பிடிப்பேன்
கல்வாரி அன்பை விளம்பிடுவேன்
நொடி நேரமதில் என்னைச் சந்திப்பார்.
முடி சூடி என்றும் ஆளுகை செய்வேன் - ஆஹா
அங்கி வெள்ளையாக நிற்கும் ஜனம்
தங்கி தாபரிக்கும் காட்சி கண்டேன்
இந்த சேனையெல்லாம் எங்கிருந்தென்றேன்
வந்த உபத்ரவத்தில் நிலைத்தோர் என்றார் - ஆஹா
துதி பாடிடும் தூதர் கனம்
துயர் நீங்கும் பின் மறுகணம்
துங்கன் இயேசுவின் தூயப் பிரசன்னம்
தங்க மாளிகையில் எங்கும் ஜொலிக்கும் - ஆஹா
Kodum Kolgathavin Kodumudiyil lyrics songs, Kodum Kolgathavin Kodumudiyil song lyrics, Kodum Kolgathavin Kodumudiyil Lyrics Song Chords PPT - கொடுங் கொல்கொதாவின் கொடு முடியில்
true
true