Nanmai Seiyum Naayagarae Paar Lyrics Song Chords PPT - நன்மை செய்யும் நாயகரே

நன்மை செய்யும் நாயகரே
பார் போற்றும் தூயவரே (2)
எனக்காக நிற்பவரே
எப்போதும் இருப்பவரே (2)

நன்றி என்ற ஓர் வார்த்தை
உமக்கது போதுமோ? (2)
உம் பாதம் பணிந்தாலும்
நன்றி கடன் தீருமோ? (2)

1. விட்டு விடாமலே விட்டுக் கொடாமலே
விழுங்க விழி தேடும் கண்களில் படாமலே (2)
கரங்களில் வரைந்தீரே
காரியமாய் அழைத்தீரே (2)
அழைப்பினை மறப்பேனோ?
அறுவடை கொடாமல் மரிப்பேனோ? (2)

2. என் பாவம் நிலுவையிலே என்னைத் தள்ளிடாமலே
சுமந்தீர் சிலுவையிலே நிறைந்தீர் மனதினிலே (2)
மனிதரன்பு மறந்திடுமே
புனிதரன்போ? தொடர்ந்திடுமே (2)
நீர் செய்த தியாகங்கள்
எழுதுவேன் பல நூறு ஆகமங்கள் (2)

Nanmai Seiyum Naayagarae Paar lyrics songs, Nanmai Seiyum Naayagarae Paar song lyrics, Nanmai Seiyum Naayagarae Paar Lyrics Song Chords PPT -நன்மை செய்யும் நாயகரே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create