நீர் மட்டும் இல்லையென்றால்
என்றோ நான் அழிந்திருப்பேன்
உம் கிருபை மட்டும் இல்லையென்றால்
பாவத்தில் மரித்திருப்பேன்-2
நீர் என்னை தேடி வந்தீர்
உம் ஜீவன் எனக்காய்த் தந்தீர்-2
1. அழியா வாழ்வை எனக்குத் தந்திட
ஆணிகள் பாய்ந்தன உம் கரத்தில்
என் மேல் இருந்த சாபம் போக்கிட
சாபமானீர் சிலுவையினில்-2
என்னை மீட்டிடவே
என்னை உயர்ந்திடவே உம் இரத்தம் சிந்தினீரே-2
2. மேய்ப்பன் இல்ல ஆடுகள் போல
அலைந்து திரிந்த போதும்
தண்ணீர் இல்லா பாலைவனத்தில்
தாகத்தால் நான் தவித்த போதும்
எந்தன் அடையாளம் என் ஆதரவாய்
நீர் எனக்காய் இறங்கி வந்தீர்
Neer Mattum Illai Endraal lyrics songs, Neer Mattum Illai Endraal song lyrics, Neer Mattum Illai Endraal Lyrics Song Chords PPT - நீர் மட்டும் இல்லையென்றால்
TRUE
TRUE