Neer Seitha Nanmaigalai Ninaikiren Lyrics Song Chords PPT - நீர் செய்த நன்மைகளை நினைக்கிறேன்

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
உம் பாதம் விழுந்து நன்றி சொல்கிறேன்
உம் வல்ல செயல்களை நினைக்கின்றேன்
ஓயாமல் முத்தம் செய்கிறேன்-2

என்னை மன்னித்தீரே உம் தூய இரத்தத்தால்
என்னை தூக்கினீரே உம் பாசக்கரத்தால்
என்னை தாங்கினீரே உம் கிருபையால்
எனக்காக பூலோகம் வந்தவரே
என் மீறுதலுக்காய் காயப்பட்டீர்
என் அக்கிரமத்திற்காய் நொறுக்கப்பட்டீர்
என் துக்கங்களெல்லாம் சுமந்துகொண்டீர்
எனக்காக சமாதான பலியானீர்

உம்மைப் போல தெய்வம் யாருமில்லை (4)

1. தொலைந்த நேரத்தில் நல்ல மேய்ப்பனாய்
தேடி வந்தீர் உம் தோளில் தூக்கினீர்
அழுது நொந்த நேரங்களெல்லாம் - ஒரு
தாயைப் போல என்னை ஆற்றி தேற்றினீர்
நடக்க முடியாத நேரங்களெல்லாம்
ஒரு தந்தை போல என்னை தூக்கி சுமந்தீர்
பறந்து காக்கும் ஒரு பட்சியைப் போல
உம் சிறகுகளால் என்னை மூடி அணைத்தீர்

2. தளர்ந்த நேரத்தில் நல்ல தோழனாய்
தோள் கொடுத்தீர் என் கூடவே நின்றீர்
உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
காயம் கட்டினீர் நல்ல சமாரியனாய்
வியாதிகள் வந்த நேரமெல்லாம்
பரிகாரியாய் வந்து குணமாக்கினீர்
துன்பத்தில் தாங்கும் மணவாளனாய்
மனமிரங்கி என்னை மகிழச் செய்தீர்

Neer Seitha Nanmaigalai Ninaikiren lyrics songs, Neer Seitha Nanmaigalai Ninaikiren song lyrics, Neer Seitha Nanmaigalai Ninaikiren Lyrics Song Chords PPT -நீர் செய்த நன்மைகளை நினைக்கிறேன்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create