நீதியின் தேவனே வரவேண்டும்
நிம்மதி என் வாழ்வில் தரவேண்டும்
ஏழைகள் ஆற்றலே நீயன்றோ
அவர்தம் வீழ்ச்சியுன் தோல்வியன்றோ
உறங்காமல் ஓயாமல் உழைக்கின்றோம்
உலகை எம் வியர்வையால் நனைக்கின்றோம்
விளைகின்ற பொருளில் எமக்குரிமையில்லை
விம்முகின்ற குரல்களுக்கு முடிவுமில்லை
எம் தெய்வமே இறைவா
இந்நிலையில் இனி எமக்கு விடிவுண்டோ
முடிவுண்டோ வாழ்வுண்டோ
இலஞ்சத்தால் வாழ்வை விலைபேசிடுவார்
பஞ்சமென்னும் சங்கிலியால் பூட்டிடுவார்
தேவையான பொருளை விலை ஏற்றிடுவார்
ஏழை எங்கள் அழுகையிலே மகிழ்ந்திடுவார்
எம் தெய்வமே இறைவா
இந்நிலையில் இனி எமக்கு விடிவுண்டோ
முடிவுண்டோ வாழ்வுண்டோ
Neethiyin Deivanae lyrics songs,Neethiyin Deivanae song lyrics, Neethiyin Deivanae Lyrics Song Chords PPT -நீதியின் தேவனே வரவேண்டும் , tamil christian songs lyrics
TRUE
TRUE