நிலையான சிங்காசனம்
என் இயேசு எனக்குத் தந்தார்
அவர் இருக்கின்ற உயரத்திலே
என்னை அவருடன் அமரச் செய்தார்
உலகம் என் காலுக்குக் கீழே
சாத்தான் என் காலுக்கு கீழே
மாம்சம் என் காலுக்குக் கீழே
நான் இயேசுவோடு அமர்ந்திருந்து
ஆளுகை செய்கிறேன்
1. என்னை பரிசுத்தவான் என்று
அழைப்பதற்காய் இயேசு பாவமானார் (2)
நான் பலவான் என்று அழைக்கப்பட
இயேசு எனக்காய் கைவிடப்பட்டார் (2)
2. என்னை நீதிமான் என்று அழைப்பதற்காய்
இயேசு சாபமானார் (2) - என் நீதியும்
ஞானமும் பரிசுத்தமும் - என்றென்றைக்கும்
இயேசுவானார் அல்லேலூயா
3. கிறிஸ்துவின் சிந்தை எனக்குள் உண்டு
கிறிஸ்துவின் ஆவி எனக்கு உண்டு (2)
என்னை பூச்சி புழு என்று நான்
சொல்லிக் கொள்வதை - தாழ்மையென்று
நினைத்து என்னை ஏமாற்ற மாட்டேன் 1
4. என்னை பாவி என்றும் ஏழை என்றும்
சொல்ல மாட்டேன் - பெலவீனன்
தூசி என்றும் சொல்ல மாட்டேன் - கந்தை
என்றும் குப்பை என்றும் சொல்லமாட்டேன்
ஜெயம் கொண்டவன் - பெலன்
கொண்டவன் என்று சொல்லுவேன்
Nilayana singasanam en yesu lyrics songs, Nilayana singasanam en yesu song lyrics, Nilayana singasanam en yesu Lyrics Song Chords PPT - நிலையான சிங்காசனம்
TRUE
TRUE