பாட்டு நான் பாடக் கேட்டு
என் பாடல் நாயகா விருந்தாக வா வா
உன் அன்பில் நான் என்றும் ஒன்றாக வேண்டும்
உன்னாலே என் வாழ்வு நன்றாக வேண்டும் (2)
1. இராகங்கள் இல்லாத வாழ்வென்னும் வீணையில்
கானங்கள் அரங்கேறும் உன் வரவால் - இறைவா
சோகங்கள் மறைந்தோடும் உன் உறவால்
இருளோடும் துயரோடும் போராடும் என் வாழ்வில் - 2
அருளாலே விளக்கொன்று நீ ஏற்ற வா
அதை நாளும் அணையாமல் நான் காக்க வா
2. மாதங்கள் பன்னிரெண்டும் தேவா உன் திருவாசல்
மானிடரின் வரவுக்காய் காத்திருக்கும்
தினம் மாறாத அன்புக்காய் பூத்திருக்கும்
நீ வாழும் கோயில் தான் ஏழை என் உள்ளம் -2
உனை உண்டு வாழ்ந்தாலே அழிவில்லையே
உனை விட்டுப் பிரிந்தாலே அருளில்லையே
Paattu Naan Paadak Kettu lyrics songs,Paattu Naan Paadak Kettu song lyrics, Paattu Naan Paadak Kettu Lyrics Song Chords PPT - பாட்டு நான் பாடக் கேட்டு , tamil christian songs lyrics
true
true