Rajakkalil Miga Periyavare Lyrics Song Chords PPT - ராஜாக்களில் மிக பெரியவரே

ராஜாக்களில் மிக பெரியவரே
வானிலும் பூவிலும் பெரியவரே
அக்கினி கன்மலை உயர மலையிலும்
நம் தேவன் மிகவும் பெரியவரே -2

இந்த வானம் உம் சிங்காசனம்
இந்த பூமி உம் பாதபடி – 2

பூமியின் எல்லை பரியந்தமும்
யுத்தங்களை ஓயப்பண்ணுகிறீர்
வில்லை ஒடித்து ஈட்டியை முறித்து
இரதங்களை சுட்டெரிக்கின்றீர்'
உமது கோபத்தால் பூமி உருகி
நதியாய் ஓடுகின்றதே
உமது கோபத்தால் காற்றும் கடலும்
ஜனங்களை அழிக்கின்றதே
நீர் மாத்திரம் நீதியுள்ள தேவன்

மனுஷனை நீர் நினைப்பதற்கு
எம்மாத்திரம் என் ஆண்டவரே
மனுஷர் கையின் வேலையெல்லாம்
ஒன்றுமில்லை என் ஆண்டவரே
உமது இரக்கத்தால் பூவில் ஜாதிகள்
சுகமாய் வாழ்கிறார்கள்
உமது இரக்கத்தால் பூவில்
ஜாதிகளை ஆசீர்வதிக்கின்றீரே
நீர் மாத்திரம் அன்பான தேவன்

3. தேவரீர் பூவில் வாசம் செய்வீரே
வானாதி வானங்கள் கொள்ளாதே
மனுஷர்கள் கட்டும் ஆலயத்தில்
வாசம் செய்யும் தேவ ஆலயம்
மனிதர் இதயங்கள் தான்
கண்ணீர் கவலைகள் யாவும்
நீக்கியே வாசம் செய்திடுவீர்
நீர் மாத்திரம் மெய்யான தேவன்

Rajakkalil Miga Periyavare lyrics songs, Rajakkalil Miga Periyavare song lyrics, Rajakkalil Miga Periyavare Lyrics Song Chords PPT - ராஜாக்களில் மிக பெரியவரே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create